புதிய கட்டுரைகள் - 2010

தேதி: 29th April 2010

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

முஹம்மது மெக்காவை கைப்பற்றிய பிறகு, பத்து பேரை கொலை செய்யும்படி தன் அடியார்களுக்கு சொல்லியிருந்தார். அந்த பத்து நபர்களில் பெண்களும் அடங்குவார்கள். ஏன் இப்படி அவர் செய்தார்? அவர்கள் செய்த குற்றம் என்ன? அவர்களை கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் என்ன குற்றம் புரிந்தார்கள்? அவர்களில் எத்தனை பேர் உயிர்த்தப்பினார்கள்? போன்றவற்றை அறிய படிக்கவும்: முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் (Muhammad And The Ten Meccans). குர்‍ஆனில் காணப்படும் சரித்திர தவறுகளில் ஒரு தவறு, மோசேவிற்கு தேவன் எத்தனை கற்பலகைகளை கொடுத்தார் என்பதைப் பற்றியதாகும், அதைக்குறித்து அறிய படிக்கவும்: குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்.

தேதி: 26th April 2010

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஆறு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

குர்‍ஆனில் காணபபடும் முரண்பாடுகள், சரித்திர பிழைகள் என்ன? குர்‍ஆன் எப்படி முந்தைய வேதமாகிய தோராவிற்கு முரண்படுகின்றது என்பதை விளக்கும் ஒரு சிறிய தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது:

1)  மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

2)  யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?

3)  சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?

4)  ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?

5)  அவர்கள் இருவரும் வாலிபர்களா?

6)  ஆபிரகாமின் பெயர்

தேதி: 28th Mar 2010

கடந்த வாரம் ஆன்சரிங் இஸ்லாம் ஹிந்தி (Answering Islam Hindi) பிரிவு கர்த்தரின் கிருபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மனைவி கிழவியாகி விட்டாள் என்பதற்காக முஹம்மது தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினார், அதுவே குர்-ஆனின் சட்டமாகவும் ஆகிவிட்டது.  இது ஒரு நபிக்கு ஏற்ற செயலா? இது மனிதாபமானத்தொடு நடந்துக்கொள்வதா? படியுங்கள், இஸ்லாமிய நபியின் நன்னடத்தை: மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது: ஸவ்தா பின்ட் ஜமா (Muhammad, Lord of the Sent Ones? - SAUDA BINT ZAM’AH).

தேதி: 16th Mar 2010

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் குர்‍ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை? குர்‍ஆன் சொல்வதா? முஹம்மது சொன்னதா? அல்லது இஸ்லாமியர்கள் நம்மிடம் சொல்வதா? படியுங்கள்: பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி.

ஒரு வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதை நியாயப்படுத்த தனக்கு ஆயிஷாவை அல்லாஹ் கனவில் காட்டினார் என்று சொல்லி ஒரு கட்டுக்கதையை முஹம்மது சொல்லிவைத்தாரா?  அல்லது  ஜனப்போடு போட்டியிட அல்லது ஜனப்போடு சமமாக பெருமை அடித்துக்கொள்ள ஆயிஷா இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதையை, அதாவது தன்னை அல்லாஹ் முஹம்மதுவிற்கு கனவில் காட்டினார் என்ற கட்டுக்கதையை சொல்லிவைத்தார்களா? படியுங்கள்: முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள் - ஜைனப் மற்றும் ஆயிஷாவின் முரண்பட்ட விவரங்கள்.

உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா? அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா? படியுங்கள்: "நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லியுள்ளாரா?


புதிய கட்டுரைகள் - 2009

தேதி: 31th Dec 2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


மோசேயின் காலத்தில் சமாரியர்கள் பற்றி கூறி குர்‍ஆன் ஒரு சரித்திர தவறை செய்துள்ளது, அக்கட்டுரையை படிக்கவும்: மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)

தேதி: 6th Dec  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது

26/11 மும்பை தாக்குதல் சிறப்புக் கட்டுரை: கடந்த ஆண்டு (2008) நவம்பர் மாதம் 26ம் தேதியன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் மும்பையை தாக்கினார்கள். பல இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பையும் காட்டினார்கள். இஸ்லாமிய தீவிரவாதத்தை அறிந்துக்கொள்ளவேண்டுமானால், முதலில் நாம் முஹம்மதுவை அறிந்துக்கொள்ளவேண்டும். முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்றுச் சொல்வதற்கு முன்பு, முஹம்மது எப்படி வாழ்ந்துக் காட்டினார், அவர் ஒரு தீவிரவாதியாக வாழ்ந்துக் காட்டினாரா அல்லது இன்றையை இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றபடி அவர் ஒரு அமைதியை நாட்டுகின்றவராக வாழ்ந்து காட்டினாரா? ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம் என்றுச் சொல்வதுபோல் இன்றையை முழு இஸ்லாமிய தீவிரவாதத்தை அறிய வேண்டுமானால், முதலாவது முஹம்மது ஒரு தீவிரவாதியாக இருந்தாரா என்பதை அறிய வேண்டும். இதனை அறிய படிக்கவும்: முஹம்மது ஒரு தீவிரவாதியா?

தேதி: 27th September  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* இஸ்லாமுக்கு மக்களை ஈர்க்க பணத்தை பயன்படுத்தச் சொல்லி குர்-ஆன் கட்டளையிடுகிறது. இஸ்லாமியர்கள் ஹலாலாக சம்பாதித்து கொடுக்கும் ஜகாத்தில் ஒரு பகுதியை காபிர்களுக்கு (இஸ்லாமியரல்லாதவர்களுக்கு) கொடுக்கும்படி குர்-ஆன் கட்டளையிடுகிறது, முஹம்மதுவும் பணத்தை கொடுத்து இஸ்லாமியராக மாற்றினார். படிக்கவும்: பணமும் இஸ்லாமுக்கு மாறியவர்களும் - இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது.

* கனி தரவில்லை என்ற காரணத்திற்காக இயேசு ஒரு அத்திமரத்தை சபித்தார். மேலும், அது அத்திமரம் கனி தரும் காலமுமல்ல. அப்படியானால் இயேசு  ஏன் அத்திமரத்தை சபித்தார்? அதன் பின்னணி என்ன தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?

* ஏன் முஹம்மதுவின் மனைவிகள் “நம்பிக்கையாளர்களின் சகோதரிகள்” என்று அழைக்கப்படாமல் “நம்பிக்கையாளர்களின் தாய்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்? குர்-ஆன் எந்த காரணத்திற்காக மரியாளை புகழ்பெற்ற ஆரானின் சகோதரியாக அழைக்கிறது ஆனால் இம்ரானின் மகளாக அழைக்கிறது? குர்-ஆனின் முரண்பாட்டை படிக்கவும்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்.

தேதி: 27th July  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சமர்கண்ட அரபி மூல குர்‍ஆனும், இன்று நம்மிடையே இருக்கும் குர்‍ஆனும், எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியாக இருக்கின்றதா? "ஆம்" ஒரு எழுத்தும் வித்தியாசம் இருக்காது என்று இஸ்லாமிய அறிஞர்கள்  சொல்வார்கள், ஆனால், உண்மை வேறு மாதிரியாக உள்ளது, கீழ் கண்ட கட்டுரைகளில் சமர்கண்ட மூல குர்‍ஆனின் படங்களோடு இன்றைய குர்‍ஆனின் வசனங்களை ஒப்பிட்டு, இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெளிவாக காட்டப்பட்டுள்ளது (இக்கட்டுரைகளின் பாகம் 1ஐ இங்கு படிக்கவும்)

பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2)
பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3)
பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)

தேதி: 18th July  2009


இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


* இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மையுள்ள மார்க்கம், இது மக்களிடையே பேதங்கள் பார்ப்பதில்லை என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள், ஆனால், ஒரு இஸ்லாமிய ஆண் ஒரு கிறிஸ்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதியுண்டு, ஆனால், ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ய அனுமதியில்லை.  இந்த‌ சட்டத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது? ஏன் இப்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது, ஒரு இஸ்லாமியரை மணக்கும் கிறிஸ்தவ பெண்ணின் வாழ்வு இனிமையானதாக இருக்குமா? தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை.

*பழைய ஏற்பாட்டில் சில இடங்களில் வன்முறை காணப்படுகின்றதே! கானானியரை துரத்தி அவர்களின் நாட்டை இஸ்ரவேலுக்கு தேவன் அளித்தாரே! இது வன்முறையில்லையா? அப்படி இருக்கும்போது, இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறையை மட்டும் ஏன் இவ்வளவு பெரியதாக மக்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலை இந்த சிறிய கட்டுரையில் காணலாம்:  பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை.

*இயேசு இஸ்லாமிய நபி என்று இஸ்லாமியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள், ஆனால், அவரது போதனைகளை குர்‍ஆனில் காணமுடியுமா?  இயேசுவின் போதனைகளை கட்டளைகளை பைபிளில் காணலாம், இந்த சிறிய கட்டுரையில் மத்தேயு சுவிசேஷத்திலிருந்து தொகுக்கப்பட்ட சில வசனங்களை காணலாம்: இயேசுவின் சில கட்டளைகள் (இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்).

* இயந்திரத்தைப் போல  தன்னை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் எதிர்ப்பார்க்கிறது? இப்படி தொழுதுக்கொள், இப்படி உட்கார், இந்த விதமாக கைகளைக் கட்டு, விரல்களை நீண்டு? இப்படி அனேக கட்டளைகளினால், அனேக இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டு, இஸ்லாமை விட்டு வெளியேறுகின்றனர். இப்படி இஸ்லாமைவிட்டு வெளியேறி இயேசுவின் இரட்சிப்பைப் பெற்ற ஒரு மலேசிய முஸ்லீமின் (தர்மிஷியின்) சாட்சியை இந்த கட்டுரையில் படியுங்கள்.

தேதி: 17th June  2009


இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


இயேசு தன் செய்தியை பரப்ப பட்டயத்தை பயன்படுத்தினாரா? இயேசுவின் சீடர்கள் பட்டயங்களை பயன்படுத்தி இயேசுவின்  நற்செய்தியை பரப்பினார்களா? குறைந்த பட்சம் தங்களை பாதுகாத்துக்கொள்ள சீடர்கள் பட்டயங்களை பயன்படுத்தலாம், வன்முறையில் ஈடுபடலாம் என்று இயேசு சொன்னதுண்டா?  இஸ்லாமியர்களில் சிலர், இயேசு பட்டயத்தை  பயன்படுத்தலாம் என்றுச் சொன்னதாக கூறுகிறார்கள், இதற்காக சில பைபிள் வசனங்களை குறிப்பிடுகிறார்கள். இதற்கான பதில் என்ன தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் இந்த இரண்டு கட்டுரைகளை படியுங்கள்:

* மத்தேயு 10:34ல் உள்ள பட்டயத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கம்.
* லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்.

இஸ்லாமியர்களின் ஜெபங்களுக்கு/வேண்டுதல்களுக்கு அல்லாஹ் பதில் அளிப்பவரா?  கேளுங்கள் தரப்படும் என்று இயேசு சொன்னது போல, ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடுங்கள், நான் உங்கள் விடுவிப்பேன் என்ற வசனத்திற்கு ஏற்ப, குர்‍ஆனின் அல்லாஹ் சொன்னதுண்டா? வசனம் உண்டு என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், அது எந்த வசனம், அதன் அர்த்தம் என்ன? தெரிந்துக்கொள்ள படியுங்கள்:

* அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?

தேதி: 12th June  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் "கேள்வி பதில்" பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* தேவன் மரித்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்களா?

* தேவன் ஏன் மனிதனாக வந்தார்?

* யூத மதத்தைப் பின்பற்றுவோர் பரலோகம் (சொர்க்கம்) செல்வார்கள் என‌ நீங்கள் நம்புகிறீர்களா?

தேதி: 23rd May  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* கேள்வி பதில் பகுதியில் "அறிவு  ஒரு பாவமா?" என்ற தலைப்பில் ஒரு சிறிய‌ கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.

*மனைவியை முஸ்லீம்கள் எப்படி அடிக்கலாம்? லேசாக அடிக்கவேண்டுமா? காயம் ஏற்படாதவாறு அடிக்கவேண்டுமா? அல்லது அடிக்கவே கூடாதா? குர்‍ஆன் என்ன சொல்கிறது? இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனத்தை எப்படி மொழியாக்கம் செய்கிறார்கள்? தெரிந்துக்கொள்ள படிக்கவும்: அவர்களை அடியுங்கள் அல்லது அவர்களை அடிக்காதீர்கள்.

குர்‍ஆன் ஒரு அற்புதம், இதன் இலக்கிய நடைக்கும், இதன் வசனங்களில் உள்ள பொருளுக்கும் இணையாக எந்த புத்தகமும் உலகில் இல்லை, இது தான் இஸ்லாமியர்கள் நம்பிக்கை. குர்‍ஆனில் உள்ள ஒரு வசனம் போல, மனிதர்களாலும், ஜின்களாலும் கூட கொண்டுவரமுடியாது, இது குர்‍ஆனின் சவால். ஆனால் சவாலை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்? தெரிந்துக்கொள்ள படிக்கவும்:

* குர்‍ஆன் ஒரு அற்புதமா?
* சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்.

தேதி: 25th April  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* கேள்வி பதில் பகுதியில் இரண்டு பதில்கள் பதிக்கப்பட்டுள்ளது.

இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் இல்லையானால், அந்தச் செயலை யார் செய்திருப்பார்கள்? அல்லது இந்த செயலை செய்வதற்காகவே யூதாஸ் தேவனால் முன் விதிக்கப்பட்டு இருந்தாரா? குர்‍ஆனின்  அபூலஹப் என்ற 111 வது அதிகாரத்தில், யூதாஸைப் போலவே, அபூலஹப் தண்டனை அடைய முன்குறிக்கப்பட்டு இருந்தாரா? இந்த ஒரு சிறிய பதிலை படிக்கவும்:  யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

* பைபிள் பாரபட்சமில்லாமல் தன் கதாநாயகர்களின் (தீர்க்கதரிசிகளின், விசுவாசிகளின்) தவறுகளை சுட்டிக்காட்டுகிறதே?  இது சரியாகுமா? தீர்க்கதரிசிகள் பாவம் செய்யமாட்டார்கள் என்ற இஸ்லாமிய வாதம் சரியானதா? தெரிந்துக்கொள்ள படிக்கவும்: பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?

* முஹம்மது தான் கடைசி இறைத்தூதர், தீர்க்கதரிசி என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். அவர் தான் இறைவனின் நபித்துவ முத்திரை (கடைசியானவர்), இனி யாரும் வரமாட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் திடமாக நம்புகிறார்கள். ஆனால், இது சரியானதா? இறைவனின் உண்மையான நபித்துவ முத்திரை இயேசு தான் என்பதை பைபிள் ஆதாரத்தோடு இக்கட்டுரை விளக்குகிறது. முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்பதையும், இன்னொரு தேற்றரவாளன் வருவார் என்று இயேசு கூறியது, பரிசுத்த ஆவியானவரைத் தான் முஹம்மதுவை அல்ல, என்பதை விளக்குகிறது, இக்கட்டுரை. படிக்கவும்: இயேசுவா (அ) முஹம்மதுவா:  இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்?

தேதி: 3rd April  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* இஸ்லாம் அனுமதிக்கும் பலதார மணம் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கருத்து சரியானதா? அவர் முன்வைக்கும் புள்ளிவிவரங்களுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை, ஆனால் உண்மை புள்ளிவிவரம் என்ன சொல்கிறது? உலகை படைத்த இறைவன் மனிதன் ஒரு மனைவியோடு வாழவேண்டும் என்று விரும்பினாரா? தெரிந்துக்கொள்ள படிக்கவும்:  பல தார மணத்திற்கு மறுப்பு (Polygamy)

* இயேசுவும் முஹம்மதுவின் மனிதர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உண்டக்கியுள்ளார்கள், இவர்களின்  தனிப்பட்ட வாழ்க்கை, கோட்பாடு இவரை பின்பற்றுகிறவர்களை ஆட்கொள்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இயேசுவா முஹம்மதுவா? உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு

* இஸ்லாமியர்கள் கேட்கும் அனேக கேள்விகளில் ஒன்று "கிறிஸ்தவர்களுக்கு ஏன் பன்றி மாமிசம் சாப்பிடுகிறார்கள்?" என்பதாகும். இதற்கான பதிலை இங்கு படிக்கலாம்:  பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் (The Issue of Eating Pork)

* கிறிஸ்தவர்கள் மோசேயின் கட்டளையை மீறி நடக்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் கேள்வியை எழுப்புகின்றனர். ஆனால், அதே இஸ்லாமியர்கள் மோசே கட்டளையிட்ட அனேக கட்டளைகளை மீறி நடக்கிறார்கள். இப்படிப்பட்ட கேள்வியை எழுப்பிய ஷப்பீர் அலி அவர்களுக்கு கொடுத்த முதல் மறுப்பை இங்கு படிக்கலாம்: பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு ("ப‌ன்றி க‌றியை உண்ணுத‌ல்" க‌ட்டுரைக்கு கிறிஸ்த‌வ‌ ப‌தில்) - பாகம் 1

*  யூதர்களும் கிறிஸ்தவர்களும் மோசேயின் கட்டளைகளை பின் பற்றுவதில்லை என்று இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், முஹம்மது மோசேயின் அனேக கட்டளைகளை மீறி நடந்துள்ளார். ஒரு யூதனோ, கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறினால், அவனால் முழுவதுமாக மோசேயின் கட்டளைகளை பின்பற்றிக்கொண்டே ஒரு இஸ்லாமியனாக வாழமுடியுமா? நிச்சயமாக முடியாது? முஹம்மதுவின் போதனைகள் மோசேயின் கட்டளைகளுக்கு எதிரானவைகளாகும், மேலும் அறிய படிக்கவும்:  இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ (இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்)

தேதி: 10th March  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, இறைவனோடு நெருங்கி வாழவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இருந்தால், உண்மையான இறைவனை தேடினால், நிச்சயமாக அவரை கண்டுக்கொள்வான். இதோ ஒரு மலேசிய இஸ்லாமியர் உண்மை தெய்வத்தை கண்டுக்கொண்ட சாட்சி, படிக்கவும்: ஹிஷாமின் சாட்சி ‍- இப்போது நான் அல்-மஸீஹாவை முழுமையாக நம்பும் விசுவாசி.

* நோவாவின் கால வெள்ளம் உலகமயமானதா? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்த வெள்ளமா?  பைபிள் சொல்லும் உலக மயமான வெள்ளம் தவறானது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு, அவர்களின் குர்‍ஆனிலிருந்தும், ஆரம்ப கால இஸ்லாமிய ஆதாரங்களிலிருந்தும் பதில், படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?).

* நோவாவின் கால மக்களுக்கு நோவா மட்டும் தான் தூதராக வந்தார் என்று அல்லாஹ் குர்‍ஆனில் சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தில், அதற்கு நேர் எதிரான வசனத்தை இறக்கியுள்ளார், படிக்கவும்: குர்‍ஆன் முரண்பாடுகள் - நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

* நோவா 950 வருடங்கள் வாழ்ந்தார் என்று பைபிள் சொல்கிறது  அதே போல‌ குர்‍ஆனும் நோவா 950 வருடங்கள் வாழ்ந்தார் என்றுச் சொல்கிறது. ஆனால், குர்‍ஆன் ஆக்கியோன் செய்த ஒரு முக்கியமான முரண்பாட்டை இங்கு படிக்கலாம்: நோவாவின் வயது (Noah's Age).

தேதி: 16th February 2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* தான் ஒரு இஸ்லாமியராக இருந்திருந்தால், எப்படி இஸ்லாமின் பல கோட்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு இருப்பார் என்று டல்லஸ் ரோர்க் விவரிக்கிறார். படிக்கவும்:  நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால்...  (If I were a Muslim...).

* கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து அனேக வித்தியாசங்களை நாம் அறிந்திருந்தாலும், இந்த ஒரு வித்தியாசம் நம் எதிர்கால நித்திய வாழ்க்கையை மாற்றிவிடும்,  படிக்கவும்: இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசம்.

* இஸ்லாமிய நாடாகிய மலேசியாவிலிருந்து இயேசுவே உண்மையான தெய்வம் என அறிந்துக்கொண்ட இஸ்லாமிய சகோதரர்கள் இருவரின் சாட்சிகள், படிக்கவும் 1) சகோதரர் பைசல் அவர்களின் சாட்சி 2) சகோதரர் யஹ்யா அவர்களின் சாட்சி.

* முஹம்மது பாவம் செய்தார் என்று குர்‍ஆன் தெள்ளத்தெளிவாக சொன்னாலும், அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத சில குர்‍ஆன் மொழிப்பெயர்ப்பாளர்கள், தங்கள் கைவரிசையை தங்கள் மொழியாக்கங்களில் தொடர்ந்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள், அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் என்று அறிய படிக்கவும்: முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது 47:19 (The Sins of Muhammad).

தேதி: 31st January 2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* தற்போது காஸாவில் நடந்துக் கொண்டு இருக்கும் போரினால் விளையும் தீமைகள் என்ன? அமைதியை தேவன் எப்படி கொண்டுவருகிறார்? போன்றவற்றை அறிய படிக்கவும்:காஸா (Gaza): நீதியில்லை, அமைதியில்லை! நீதியை அறிந்துக்கொள், அமைதியை அறிந்துக்கொள்! (Gaza: No Justice - No peace! Know Justice – Know Peace!)

* அமெரிக்க விமானப்படை இராணுவ வீரர் தன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எப்படி சௌதி அரேபியாவில் கொண்டாடினார் என்பதைப் பற்றிய உருக்கமான கடிதம், படிக்கவும்: சௌதி அரேபியாவில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் (Christmas in Saudi Arabia)

* மலேசியாவில் இஸ்லாமியராக பிறந்து, இயேசுவை அறிந்துக்கொண்ட ஒரு உயிருள்ள சாட்சி, இதோ: சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி (Brother Chariah’s Testimony)

* அஹமத் தீதத் அவர்களுக்கு முதல் மறுப்பு, யோனாவின் அடையாளம் என்றால் என்ன? என்ற அவரது புத்தகத்திற்கு மறுப்பு படிக்கவும்: உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (What Indeed Was the Sign of Jonah? ) - Part 1

* உலகில் இஸ்லாம்  வேகமாக வளருகிற மதமாக இஸ்லாம் உள்ளது, இதனால், இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம், இது இஸ்லாமியர்களின் வாதம் அல்லது ஊகம், இது சரியா? படிக்கவும்: வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா? (More is Better?)

தேதி: 17th January 2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* மலேசியா நாட்டில் ஒரு பக்தியுள்ள இஸ்லாமியராக வளர்க்கப்பட்ட ஷரபுத்தீன் என்பவர், தான் இஸ்லாமிய கடமைகளை ஒழுங்காக செய்துவந்தும், தன் மனதில் ஒரு ஆன்மீக வெற்றிடம் இருப்பதை உணர்ந்து, சத்தியத்தை தேடி, அதை எப்படி கண்டுபிடித்தார் மற்றும் எப்படி இயேசுக் கிறிஸ்துவே உண்மையான இறைவன் என்பதை அறிந்துக்கொண்டார் என்பதை அறிய படிக்கவும்: சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி (The Testimony of Brother Sharafuddin).

* இஸ்லாமியர்கள் அவ்வப்போது கேட்பார்கள்: "சுவிசேஷ நூல்கள் நான்கு இருக்கின்றன. இவைகளில் எது சரியானது?" இக்கேள்விக்கு பதில் கீழே தரப்படுகிறது. குர்‍ஆனில் ஒரு சில‌ குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் பல இடங்களில் மறுபதிவு (Parallel Accounts) செய்யப்பட்டுள்ளது,  அப்படிப்பட்ட 22 நேரடி உரையாடலில் உள்ள வித்தியாசங்களை அரபி வசனங்களோடு கண்டறிய படிக்கவும்: அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்? (Mis-Quotations in the Arabic Text of the Qur’an?).

* இஸ்லாமியர்கள் பொதுவாக கேட்கும் கேள்வி, "ஒரு இரட்சகர் அல்லது மீட்பர் என்பவர் நிச்சயமாக இறைவனாகத் தான் இருக்கவேண்டுமா?"  இக்கேள்விக்கான பதிலை வேத வசனங்களோடு விளக்கியுள்ளார் சாம் ஷமான் அவர்கள். இயேசுவே யேகோவா தேவன் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள படிக்கவும்: மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா? (Is the Savior necessarily God?)


புதிய கட்டுரைகள் - 2008

தேதி: 30th December 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இயேசு சமாதானம் தருபவர் என்று நம்புகிறவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டுமே அல்ல. இஸ்லாமியர்களும் இயேசுக் கிறிஸ்து மறுபடியும் கடைசிக் காலங்களில் வருவார் என்றும் மற்றும் அவர் தீமையை வென்று, உலகமனைத்திற்கும் சமாதானத்தை தருவார் என்றும் நம்புகிறார்கள். மஸீஹாவாகிய இயேசு எப்படி சமாதானம் தருவார், அறிந்துக்கொள்ள படிக்கவும்: மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர் (Messiah the PeaceMaker).

பைபிளைப் போலவே  குர்‍ஆனும் மஸீஹாவின் அற்புதப் பிறப்பு எனபது "இறைவனிடமிருந்து வந்த அடையாளம்" என்றுச் சொல்கிறது. அல்லா கொடுக்கும் அடையாளம் பற்றி குர்‍ஆன் மிகவும் மெச்சிக் கொள்கிறது, இவ்வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்கத்தூண்டுகிறது, அல்லாவின் அடையாளத்தை புரிந்துக்கொள்பவர்களைப் பற்றி குர்‍ஆன் சிந்தித்து உணரக்கூடியவர்கள், கற்றறிந்தவர்கள் என்று புகழுகிறது. அல்லாவின் அடையாளமாம் இயேசு எப்படி நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்பதை அறிய படிக்கவும்:  சொர்க்கத்தின் வழிகாட்டி (Signposts to Paradise).

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசு கிறிஸ்து "இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்" என்று நம்புகிறார்கள் (அரபியில் கலிமதுல்லா). அவர் தேவனுடைய வார்த்தையாக இருப்பதினால், வெளிச்சத்தை கொடுக்கிறார்.  குர்‍ஆனிலும் படிக்கிறோம், "அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன, அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது". நேர்வழியையும், ஒளியையும் உடைய இஞ்ஜிலைப் பெற்றவர் எப்படி நம் இருளை போக்குகிறார் என்பதை அறிய படிக்கவும்: இருளை ஒளியாக்குதல் (Lighting Up The Darkness).

தேதி: 25th December 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

முதலாவது, இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்து ஜெயந்தி நல் வாழ்த்துக்கள். ஒரு இஸ்லாமிய சகோதரர் அல்லது சகோதரிக்கு இயேசுக் கிறிஸ்து எவைகளைத் தருவார்? அல்லா கொடுப்பதைப் போல கொடுப்பாரா அல்லது அதை விட சிறப்பானதை தருவாரா? இஸ்லாமிய சகோதரிகளுக்கு கிறிஸ்தவம் கொடுக்கும் உரிமைகள் என்ன? இந்த கிறிஸ்து ஜெயந்தி நாளில் இவைகளைப்பற்றி அறிய சொடுக்கவும்: ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்? (What Does Christ Offer to a Muslim?).

தேதி: 22nd December 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே. படிக்கவும்: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே! - Merry Christmas to Muslims!

* கால‌ங்காலமாக, பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும், முஹம்மதுவை இயேசுவோடும், மற்றும் கு‍ர்‍ஆனை பைபிளோடும் ஒப்பிட்டு வந்துள்ளனர்.  ஆனால், எது சரியான ஒப்பிடுதல்?  நாம் இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் ஒப்பிடவேண்டுமானால், குர்‍ஆனோடு இயேசுவைத் தான் ஒப்பிடவேண்டும், பைபிளை அல்ல‌. எப்படி என்பதை படிக்கவும்:  தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்? (How does God reveal Himself?)

தேதி: 12th December 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* செப்ட‌ம்ப‌ர் 11 நிக‌ழ்வுக‌ளுக்குப் பிற‌கு நாட்டின் செய்தித் தொடர்பை பயன்படுத்துக் கொள்ளும் இஸ்லாமிய‌த் த‌லைவ‌ர்க‌ள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்க‌மென்றும் முஹம்மதுவின் இந்த‌ மார்க்கத்தில் வ‌ன்முறைக்கு எந்த‌ அடிப்ப‌டையும் இல்லை என்றும் சொல்லி வ‌ருகிறார்க‌ள். அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் பிரிட்டனின் பிரதமர் பிளேர் ஆகியோரும் கூட இஸ்லாம் சில வன்முறை வெறியர்களால் "கடத்தப்பட்டுள்ளது" என இதே அறிக்கையை மறு மொழிந்துள்ளனர். இது உண்மை தானா? படிக்கவும்: இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள்  (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை).

* சரி, அபு அஃபக் முஹம்மதுவின் நபித்துவத்திற்கு, நம்பகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம்.  ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் சதி திட்டமாக கொலை செய்யப்படவேண்டியவரா? அவருடைய கருத்து முஹம்மதுவுக்கு அவ்வளவு பயமுறுத்தலாக இருந்ததா? பத்ரு பேரில் மலக்குகள் முஹம்மதுக்கு உதவவில்லையா? அப்படியிருக்கும் போது ஏன் 120 வயதான ஒரு யூத மனிதனுக்கு பயப்படவேண்டும்?   படிக்கவும்: முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும் (MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK).

* இஸ்லாமியர்களில் சிலர் ஏன் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் மனதில் ஓடும் எண்ணம் என்ன? அவர்கள் யாரை பின்பற்றி இப்படிப்பட்ட செயல்களைச் செய்கிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலாகிய குர்‍ஆனும், ஹதீஸ்களும் அவர்களுக்கு போதிக்கும் பாடம் என்ன?  படிக்கவும்: அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு (To Kill and To Die In The Name of Allah).

தேதி: 29th November 2008 

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* நான் ஒரு முஸ்லிம். கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். திரித்துவக் கொள்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால், அதை என்னால் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை, விளக்குங்களேன்.  சாம் ஸ்க்ளார்ப் அவர்களின் சுருக்கமான பதிலை படிக்கவும்: திரித்துவமும் நீங்களும் (Trinity and You).

*  தீர்க்கதரிசிகள் நம்மைப் போல  பாவம் செய்யமாட்டார்கள் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். பழைய ஏற்பாட்டு நபர்களின் தீய குணங்களை பைபிள் சுட்டிக்காட்டும் போது, அவர்கள் அப்படி தீய குணத்தை உடையவர்கள் அல்ல என்று இஸ்லாமியர்கள் அடித்துச் சொல்வார்கள். ஆனால், குர்‍ஆனும் ஹதீஸ்களும் இஸ்லாமிய நபிகளின் பாவங்களை சுட்டிக்காட்டுகிறது என்பதை இவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள், இதோ இஸ்லாம் சொல்லும் ஒரு சில நபர்களின் தீய குணங்கள், படியுங்கள்: இஸ்லாமும் நபிகளின் பாவங்களும் பாகம் 1.

* கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர்  பவுல் தான், இயேசுகிறிஸ்து அல்ல என்று இஸ்லாமியர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவின் செய்திக்கு நேர் எதிரான போதகத்தை பவுல் செய்தார் என்று குற்றம் சாட்டுவார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட இரண்டு கட்டுரைகளில், இயேசுவின் செய்திக்கும், பவுலின் செய்திக்கும் இடையே உள்ள 133 ஒற்றுமைகளை இரண்டு பாகங்களாக படியுங்கள். 

பாகம் 1: கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள்.

பாகம் 2: கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையே அதிகபடியான ஒற்றுமைகள்.

* இஸ்லாம் என்றால் "அமைதி" எனப்பொருள் என்று இஸ்லாமியர்கள் புதிய விவரத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாம் என்றால் அமைதி என்ற பொருள் என்பதை நம்பவேண்டுமானால், அதே இஸ்லாம் என்றால் "பாம்பின் கடி அல்லது பாம்பின் கொட்டுதல்" என்பதையும் நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும். எப்படி என்று தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace).

தேதி: 15th November 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* சில இஸ்லாமிய நாடுகள் சுவிசேஷத்திற்கு தடை விதிக்கின்றன, இஸ்லாமியர்கள் நற்செய்தியைக் கேட்டுவிடக்கூடாது,  இயேசுவே உணமையான இறைவன் என்பதை அவர்கள் அறிந்துவிடக்கூடாது,  என்பதற்காக பல சட்டங்களை உருவாக்கி, தடை விதிக்கின்றன. ஆனால், இயேசு இஸ்லாமியர்களின் கனவில் வராமல் இருக்க‌ இந்த அரசுகள் தடை விதிக்கமுடியுமா? இது சாத்தியமா? இதோ, ஒரு இஸ்லாமியரின் கனவில் இயேசு தோன்றி அந்த இஸ்லாமியரை தன் ஆட்டுக்குட்டியாக மாற்றிக்கொண்ட அற்புத சாட்சி,படியுங்கள்: உன்னிடம் உன் சிலுவை இருக்கிறதா? (Do you have your cross yet?).

*  ஒரு எலியைக் கூட கொல்வதற்கு மனம் வராத ஒரு முஸ்லீம் எப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, மனிதர்களைக் கொல்ல முயற்சி எடுத்தார்? பிறகு பைபிளைப் படித்து, பைபிளே சொக்கத் தங்கம், குர்‍ஆன் ஒரு போலி என்பதை அறிந்தார் என்பதை அறிய படிக்கவும், இயேசு பிறந்த பெத்லகேமில் பிறந்த வாலித் என்ற இஸ்லாமியரின் சாட்சி (Walid's Testimony).

* கனடாவில் பிறந்து பாகிஸ்தானில் 23 ஆண்டுகள் முஸ்லீம்களின் மத்தியில் ஊழியம் செய்த கிறிஸ்தவர், பல ஆண்டுகள் இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் நன்கு அறிந்துக் கொண்டு, தான் ஏன் கிறிஸ்தவராக இருக்கிறார் என்பதை மூன்று முக்கிய காரணங்களாக கூறுகிறார். ஒவ்வொரு காரணத்திலும் குர்‍ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு கூறியுள்ளார், படிக்கவும்: நான் ஏன் கிறிஸ்தவனாக‌ இருக்கிறேன் (Why I am a Christian).

தேதி: 25th October 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* இயேசு கூட புனிதப்போர் (ஜிஹாத்) புரிந்தார். ஆனால், அவரது ஆயுதங்கள் கத்திகளோ, வாள்களோ, துப்பாக்கிகளோ அல்ல,  அவைகள் இவைகளை விட வலிமை வாய்ந்தவை. அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாத செயல்களுக்கு பிறகு ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமிய நண்பர்களுக்கு எழுதிய கடிதம், இதில் இயேசுவின் புனிதப்போர் குறித்த விவரங்கள் உள்ளன, படிக்கவும்: நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல் (Open Letter to Our Muslim Friends).

* இஸ்லாமியர்கள் பொதுவாக எப்போதும் கேட்கும் கேள்வி "இறைவன் மரிக்கமுடியுமா?" என்பது தான். இயேசு மரித்து மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தார் என்றுச் சொல்லும் போது, அந்த மூன்று நாட்களை யார் கவனித்துக்கொண்டார்கள்? இக்கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்ள படிக்கவும்:  "இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? இயேசு மரித்திருந்த அந்த மூன்று நாட்கள் யார் இந்த உலகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்? ".

தேதி: 9th October 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* நம் தளத்தில் "இஸ்லாம் & தீவிரவாதம்" என்ற புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில், அமெரிக்காவில் வாழும் முஸ்லீம்கள் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு சரியான பதில்  தரும்படி அதாவது ஒரு ஆக்கப்பூர்வமான செயல்களின் மூலமாக அக்குற்றச்சட்டுக்கள் தவறானது என்பதை நிருபிக்கும் படி ஒரு அமெரிக்க குடிமகன் எழுதிய கடிதம் பதிக்கப்படுகிறது, படிக்கவும்: அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம் (An open letter to Muslims in the U.S.).

* பைபிள் படிக்க விரும்பும் இஸ்லாமியர்கள் அறிய வேண்டிய ஒரு சில முக்கியமான அறிவுரைகளை இக்கட்டுரையில் படிக்கலாம்: பைபிளை வாசித்தல் (Reading the Bible).

* குர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனின் சில வசனங்களில்  தொலைந்துவிட்டன என்றுக் கூறும் ஹதீஸ்களின் சாட்சிகள் பற்றிய கட்டுரைகள். முகமதுவின் மனைவி ஆயிஷா அவர்களின் கருத்துப்படி, குர்‍ஆனின் 2:238ம் வசனம் முழுமையானதல்ல, இவ்வசனத்தில் எந்த வார்த்தை விடுபட்டுள்ளது என்பதை அறிய படிக்கவும்: ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌ (Sura 2:238 is not complete according to Aisha).

*  இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் விபச்சாரத்திற்கு கல்லெறிந்து கொல்லுதல் குர்‍ஆனில் ஒரு சட்டமாக இருந்ததாகவும், அதை முகமதுவும் பின் பற்றியதாகவும் ஹதீஸ்கள் சொல்கின்றன. ஆனால், அந்த வசனம் இன்று நம்மிடமுள்ள குர்‍ஆனில் இல்லையே? இதைப் பற்றிய விவரங்களை அறிய படிக்கவும்: விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன் (The Verse of Stoning).

* விபச்சார தண்டனையாகிய கல்லெறிந்து கொல்லுதல் வசனம் போலவே, குர்‍ஆனில் "பால் கொடுக்கும்" வசனமும் தொலைந்துள்ளது, இதைப்பற்றி ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன படிக்கவும்: இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்.

தேதி: 26th September 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

*   நாம் இருதயத்தில் குத்தப்பட்டு, உபவாசம் இருந்து நம் தவறுகளுக்காக தேவனிடம் ஒப்புறவாக விரும்புகிறோமா? உலகத்தில் நடக்கும் தீய செயல்களைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது சரியானதா? மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் கொடுமைகளையும், அமெரிக்கா போன்ற நாடுகளில் "கருக்கலைப்பு" என்ற பெயரால் மரித்துக்கொண்டு இருக்கும், இலட்சக்கணக்கான சிசுக்களையும் கண்டும் காணாமல் இருந்தோமானால், ஒரு நாள் நாம் இதன் வினையை அறுப்பது உறுதி, இதற்கு முடிவென்ன?  படிக்கவும்: இதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு) மற்றும் மனம் வருந்துதல் (Heartfelt Fasting and Repentance by Roland Clarke)

*  மரணம் என்பதின் உண்மை அர்த்தமென்ன? மரணம் தான் மனிதனின் கடைசிப் பயணமா? மரணத்தின் மீது வெற்றிப் பெற்றவரோடு சேர்ந்து நாமும் நித்திய நித்தியமாய் வாழ வழி உண்டா? உண்டு என்றுச் சொல்கிறது பைபிள். இப்படிப்பட்ட நிச்சயத்தை இவ்வுலகில் வாழும் இந்த நாட்களிலேயே பெறுவது எப்படி? படிக்கவும்: நித்திய நம்பிக்கை  (ETERNAL HOPE by Roland Clarke)

* முகமது தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் முத்திரையானவர், அதாவது கடைசியானவர், இவருக்கு அடுத்து ஒரு தீர்க்கதரிசியும் வரப்போவது இல்லை என்பார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், அதே இஸ்லாம் சொல்கிறது, அந்த முத்திரை என்பது முகமதுவின் முதுகில் உள்ள ஒரு மச்சம் போன்ற ஒரு அடையாளமாகும், இந்த மச்சம் தான் "ஒருவர் நபி" என்பதற்கு அடையாளம் என்றும் கூறுகிறது. இந்த மச்சத்தை கண்டு தான் அனேகர் முகமது ஒரு நபி என்பதை நம்பினார்கள் என்று ஹதீஸ்கள் சொல்கின்றன. இந்த சரீர குறைபாடுள்ள மச்சம் எப்படி அவரை "ஒரு நபி" என்பதை நிருபிக்க உதவும்? இதனை இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள், இதற்கு பதில் உண்டா? படிக்கவும்: முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா? (Muhammad and the Seal of Prophethood  - A Sign or A Physical Deformity?)

தேதி: 2nd September 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* உலமனைத்தும் உள்ள முஸ்லீம்கள் குர்‍ஆனைப் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்வார்கள். முகமதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆன் அன்று எப்படி இருந்ததோ அதே போல இன்று கூட உள்ளது, ஒரு மாற்றமும் இல்லை, ஒரு எழுத்துகூட மாறவில்லை, அவ்வளவு ஏன் ஒரு புள்ளி கூட மாறவில்லை என்பார்கள். ஆனால், மூல அரபிக் குர்‍ஆன்களில் பல வித்தியாசங்கள் உள்ளன. இக்கட்டுரையில் தற்காலத்தில் நம் கைகளில் தவழும்   இரண்டு அரபி குர்‍ஆன்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு, முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது, படிக்கவும்: பல விதமான அரபி குர்‍ஆன்கள்.

*  மூல குர்‍ஆன் என்று இஸ்லாமியர்களால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் சமர்கண்ட் பிரதியோடு, தற்கால குர்‍ஆன் ஒப்பிடப்பட்டு, இவைகள் இரண்டிற்கும் உள்ள அதிக எண்ணிக்கையிலான வித்தியாசத்தை, படத்துடன் விளக்கும் கட்டுரை இது, படிக்கவும்: சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு).

* பாலியல் (செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர் (Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது. முகமதுவின் பாலியல் பற்றிய‌ ஹதீஸ் ஆதாரங்கள், குர்‍ஆனின் நம்பகத்தன்மையை பாதிக்கும் அளவிற்கு உள்ளது, படிக்கவும்: முகமதுவின் பாலியல் பலம்.

தேதி: 25th August 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* உலக முஸ்லீம்கள் அனைவரும் குர்‍ஆன் ஒன்று தான் உள்ளது, அதில் ஒரு எழுத்து கூட மாறவில்லை என்றுச் சொல்லி பெருமைப்படுவார்கள்.  முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக் கூடிய “தாய் குர்‍ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை, படிக்கவும்:ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?! )

*  குர்‍ஆனில் ஒரு எழுத்து பிழையும் இல்லை, முகமதுவின் காலத்தில் எப்படி குர்‍ஆன் இருந்ததோ அப்படியே இப்போதும் உள்ளது, ஒரு எழுத்தும், அதன் ஒரு உருப்பும் மாறவில்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், பல எழுத்துபிழைகள் குர்‍ஆனில் இருக்கின்றது, அதனை இவர்கள் எப்படி சரி செய்தார்கள் என்பதை அறிய படிக்கவும்:  குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் (Scribal errors in the Qur'an)

தேதி: 16th August 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* முகமதுவிற்கு "நம்பத்தகுந்தவர்" என்ற பட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், உண்மையில் அவர் நேர்மையுள்ளவராக, பொய் சொல்லாதவராக நம்பத்தகுந்தவராக இருந்தாரா? ஒரு நல்ல மனிதரை அல்லா எப்படிப்பட்டவாராக மாற்றியுள்ளார் என்பதை அறிந்துக்கொள்ள படிக்கவும்: "முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்". 

* பைபிள் குறிப்பிடும் தேவனுக்கும் குர்‍ஆன் கூறும் அல்லாவுக்கும் இய‌ல்பு ம‌ற்றும் பண்பில் காணப்படும் அடிப்படை வேறுபாடு என்ன‌?  மனிதனுடன் தனிப்பட்ட அன்பான பரஸ்பர உறவு முறையை வைத்துக் கொள்ள முயற்சி எடுத்த இறைவன் யார்? தெரிந்துக் கொள்ள படிக்கவும்: "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்? தேவன் vs அல்லா?".

தேதி: 6th August 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* முகமது காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்? ஹதீஸ்கள் சொல்லும் சாட்சியை விட குர்‍ஆன் சொல்லும் சாட்சி அதிக வலிமைமிக்கது ஏனென்றால், அல்லா சொல்லும் சாட்சி உண்மையாக இருக்குமில்லையா? படிக்கவும் "முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராகக் கண்டனர்?

* இஸ்லாம் அமைதியான முறையில் தான் பரவியது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு / மக்களுக்கு இஸ்லாமை தழுவும் படி எழுதிய கடிதத்தை படித்தே ஆகவேண்டும். இக்கடிதத்தை படித்துவிட்டு, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று உங்களால் சொல்லக்கூடுமா என்று சிந்தியுங்கள். படிக்கவும்  "ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்".

* தேவன் ஏவாளுக்கு கொடுத்த சாபம் பற்றிய முஸ்லீம்களின் குற்றச்சாட்டு சரியா? தேவனின் சாபத்தினால் தான் பெண்கள் பிள்ளை பெறுகிறார்களா?  அல்லது பெண்கள் கர்ப்பமடைந்து பிள்ளைகள் பெறுவது ஒரு மகிழ்ச்சியான ஆசீர்வாதமா? இந்த நிகழ்ச்சிப் பற்றி  இஸ்லாம் என்னச் சொல்கிறது? அறிந்துக்கொள்ள படிக்கவும்  "இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்"

* உலக மக்களின் பாவங்களை மன்னிக்க இயேசு மரித்தே ஆகவேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் இந்த கட்டுரையில், படிக்கவும் "பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்கவேண்டுமா?"


தேதி: 5th July 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* இக்கட்டுரையில் கிறிஸ்தவம் என்றால் என்ன? ஆரம்பத்தில் தேவன் மற்றும் மனிதனின் உறவுமுறை எப்படி இருந்தது? பிறகு எப்படி மனிதன் வழிதவறினான்? மனிதனை தேவன் அப்படியே விட்டுவிட்டாரா அல்லது தன்னிடம் மனிதன் மறுபடியும் ஐக்கியம் கொள்ள என்ன செய்தார்? மற்றும் தேவன் கொடுக்கும் இரட்சிப்பு என்னும் பரிசை எப்படி நாம் பெற்றுக் கொள்ளமுடியும் போன்ற விவரங்களை காணலாம். படியுங்கள்: அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை (Outline of the Basic Christian Beliefs).

*  பொதுவாக, எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உண்டு, அதே போல, எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள் என்ற தவறான கருத்தும் மக்களிடையே உண்டு. இக்கட்டுரையில் எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள் ஆவார்களா? இல்லையா? என்பதைப் பற்றி விவரமாக விவரிக்கப்பட்டுள்ளது. படிக்க: அமெரிக்கர்=கிறிஸ்தவர்?  (American=Christian?)

தேதி: 12th June 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை என்ன? தேவனைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்? போன்ற விவரங்களை இக்கட்டுரை விளக்குகிறது, படிக்கவும்: "கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? - What Do Christian Believe?"

* ம‌னித‌ன் ந‌ற்ப‌ண்புள்ள‌வ‌னாக‌ வாழ‌முடியுமா? அறிவுபெருக்க‌ம், ந‌ல்லொழுக்க‌ம், ம‌த‌ம் ம‌ற்ற‌ம் ச‌ட்ட‌ம் போன்ற‌வைக‌ளை பின்ப‌ற்றுவ‌தால் ந‌ற்ப‌ண்பு ந‌ம்மில் தொட‌ர்ச்சியாக‌ வாழுமா? மனிதன் நற்பண்புள்ளவனாக வாழ்வதற்காக தேவன் ஏதாவது செய்துள்ளாரா? போன்ற கேள்விக‌ளுக்கு ப‌தில் இக்க‌ட்டுரையில் காணலாம், படிக்கவும்: "நற்ப‌ண்பு உங்க‌ளில் வாழ்கிற‌தா? - Does Goodness Live In You?"

தேதி:  11th May 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.

*  குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet).

* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident).

* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை: மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.

* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.